ஊனமுற்றோர்களுக்கு உதவி
உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காது கேளாதோர் முதலியவர்களுக்கு நல்வாழ்வளிப்பதில் தனி அக்கறையும் பெருங்கருணையும் கொண்டவர், புரட்சித் தலைவர். அவர் தம்முடைய சொத்தில் ஒரு பகுதியையே அவர்களுக்காக எழுதிவைத்த வள்ளலாவார். புரட்சித் தலைவர், தாம் பதவியேற்ற முதல் நான்காண்டுளுக்குள் உடல் ஊனமுற்றோருக்கு 3888 மூன்று சக்கரவண்டிகளை இலவசமாக அளித்தார்; 885 பேருக்குச் சிறிய பெட்டிக் கடைகளை வைத்துக்கொள்ள, மானிய உதவிகளை அளித்தார்.
